தன் கணவர் ராஜேஸ்வரின் செயல் சாந்திக்கு வியப்பைத் தந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன், கோடை விடுமுறைக்கு ஊட்டிக்கு குடும்பத்துடன் போய்வரலாம், செலவு தன்னுடையது என்று சாந்தியின் அண்ணன் கோபால் சொன்னபோது மறுத்தவர்,
முழு ஆண்டுத் தேர்வுக்குப் பின் வந்த விடுமுறையில் வட இந்திய திருத்தல யாத்திரைக்கு தான் அழைத்துப் போகிறேன் என்று சகலை சந்தானம் சொன்னபோது மறுத்தவர்,
இப்போது மட்டும் தன் அப்பா உதவ வரும் போது ஏற்றுக் கொள்கிறார் என்பது அவளுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.
கணவனிடமும் கேட்டே விட்டாள்.
வழக்கம்போல் அமைதியாக இருந்த ராஜேஸ்வர், ``சாந்தி... ஊட்டி போவது, யாத்திரை போவது எப்ப வேண்டும் என்றாலும் செய்யலாம்.ஆனால் நம் பையனும் பெண்ணும் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தும் இப்போதைய பிசினஸ் `டல்' காரணமாக பணத்தட்டுப்பாடு.அதைத் தெரிந்து கொண்ட உன் அப்பா, `தன் பேரன்களின் 4 வருட படிப்புச் செலவு தன்னுடையது' என்று முன் வரும் போது அதை ஏற்பது தான் முறை.
வரட்டு கௌரவம் பார்த்தால் நம் பிள்ளைகளின் படிப்பு தடைபடும். எதிர்காலம் நம்மை மன்னிக்காது'' என்றான்.
சாந்தி தெளிவு பெற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்!.
Thursday, September 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment