மாரிமுத்து என் நிலையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்... மாசம் வர வருமானத்துல... அப்பாவுக்கு, அம்மாவுக்கு, சம்சாரத்துக்குனு... மருந்துச்செலவு... குழந்தைக படிப்புச் செலவுனு... எல்லை மீறி போகத்தான் செய்யுது... எல்லாம் தாங்கித்தானே ஆகணும்...''
டீயை ஆற்றியபடி சொன்னான் கைலாசம்.
டீயைக் குடித்து காலி டம்ளரை மேஜை மீது வைத்துவிட்டுப் புறப்பட்டான் மாரிமுத்து...
``என்ன கைலாசம்... மாரிகிட்ட உன் குடும்பக் கஷ்டத்தையெல்லாம் சொல்லிக்கிட்டு,...''
டீ குடிக்க வந்த ஆறுமுகம் கேட்டான்.
``பாவம்பா நம்ம மாரி... வீட்டுல ஆள் மாறி ஆள் உடம்புக்கு சுகமில்லாம போயிடுதாம்... வர வருமானம் மருந்துக்கே பத்தரதில்லைனு நொந்துக்கறான்... அதான் என் குடும்ப கஷ்டத்தைக் கொஞ்சம் அதிகப்படியாவே சொன்னேன்... இப்போ அவன் பிரச்னை அவனுக்கு சின்னதா தெரியும்ல... அதான்...''
சொல்லியபடி டீயை ஆற்றத்துவங்கினான் கைலாசம்..
Thursday, September 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment