Friday, July 11, 2008

மஞ்சள் காமாலை

பலரையும் அலற வைக்கும் சத்தமில்லாத எதிரி மஞ்சள் காமாலைதான்! குழந்தைகள், பெரியவர்கள் என்ற எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் வரும் மஞ்சள் காமாலையும் ஒரு தொற்று வியாதிதான்! குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால். வீட்டிலுள்ள அனைவருக்கும் வந்து 5 முதல் 7 நாட்கள் வரை நம்முடைய உடலில் அழையா விருந்தாளியாக தங்கியிருந்துவிட்டுச் சென்று விடும்.
இது `ஹெப்படைடிஸ் ஏ, பி, சி, இ என்று 4 வகைப்படும்.

`ஹெப்படைடிஸ் ஏ'
இந்த வகை மஞ்சள் காமாலைதான் நம்மில் அதிகம் பேருக்கு வருவது... இது அதிக ஆபத்தில்லாதது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்திலேயேகூட குணப்படுத்திவிடலாம்.

`ஹெப்படைடிஸ் ஏ' வருவதற்கான காரணங்கள்:
நம் உடலில் உள்ள கணையத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பித்தம் அதிகமாகி அது ரத்தத்தில் அதிக அளவில் கலந்து விடுதல். அசுத்தமான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள்.

அறிகுறிகள்:
கண்கள் மஞ்சள் நிறமாகி விடுதல், வயிறு வீக்கம், சிறுநீர் மஞ்சளாகப் போகும், ஃபீவர், அஜீரணம், வாந்தி, மலம் வெளுத்துப் போகும், மஞ்சள் காமாலை முற்றி விட்டால் உடலெல்லாம் அரிக்க ஆரம்பிக்கும்.

ட்ரீட்மெண்ட்:
ரத்தப் பரிசோதனையில் `ஹெப்படைடிஸ் பி' இருப்பது தெரிய வந்தால் மருத்துவருடைய ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
இது கூடவே கூடாது!

`ஹெப்படைடிஸ் ஏ' அல்லது `ஹெப்படைடிஸ் பி' இரண்டில் எது வந்தாலும் குடிப்பழக்கம் கூடவே கூடாது. `ஹெப்படைடிஸ் பி'யினால் ஈரலில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், இந்த குடிப்பழக்கம் அதை அதிகப்படுத்தி விடும்.
`ஹெப்படைடிஸ் சி' மற்றும் `ஹெப்படைடிஸ் இ' வருவது கொஞ்சம் அரிது!

இன்னும் சில தகவல்கள்:
ஊது காமாலை வந்தால் இரும்புச் சத்தான உணவுகளைச் சாப்பிட்டாலே போதும்.
ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கு `ஹெப்படைடிஸ் பி' இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வந்தால்
பிறந்த குழந்தைகளுக்கு ரத்த அணுக்களில் ஏற்படும் மாறுபாடுகளினால் மஞ்சள் காமாலை வந்தால் இன்ஃப்ரா ரெட் (Infro Red Treatment) ட்ரீட்மெண்ட் தர வேண்டும். இந்த வகை ஷான்டிஸுக்கு பயப்படத் தேவையில்லை.
கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை வந்தால் அது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால், இவர்கள் மருத்துவருடைய ஆலோசனைப்படி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வது மிகமிக முக்கியம்!

மஞ்சள் காமாலை வந்தால் சிலருக்கு மட்டும் ஏன் வியர்வையும் மஞ்சளாக வருகிறது?
ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை குணமான பிறகும் வெளிர் மஞ்சளில் வியர்வை வெளியேறும். இதனால் அவர்களுடைய உள்ளாடைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் ஏற்படும். இதற்குக் காரணம் என்னவென்றால், மஞ்சள் காமாலை வரும்போது பாதிக்கப்பட்டவர்களுடைய ரத்தத்தில் பிளுரூபின் (Bilurubin) அளவு அதிகரிக்கும். இது மஞ்சள் காமாலை குணமான பிறகும் கூட ஒரு சிலருக்கு குறையாமல் இருப்பதுதான். இப்படிப்பட்டவர்கள் கீழாநெல்லியை மோரில் அரைத்து சாப்பிடவேண்டும். அதோடு அவர்கள் `ஹெப்படைடிஸ் பி' டெஸ்ட் செய்து கொள்வதும் நல்லது.

0 comments: