சலனமற்ற பிற்பகல் ஆகாயத்தில்
சிறு பறவையின் வரவென
சீறிச் செல்கிறது
பல அதிர்வுகளை உண்டாக்கும்
உன் நிகழ்வு
கீறிக் கொண்டேயிருக்கிறது
கலைந்து வானில் கவிதைகள்
நீ விட்டுச் சென்ற வாசனையும்
யோசனையும்
அளவற்ற வலிகளுடன்
அலையும் வானம்
கூர் நகங்களற்ற பறவை தேடி
சதா இரத்தம் வழியவிட்டு
பொழிகிறது ஒரு மழை
Tuesday, July 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment