காலை 9 மணி. ராஜன், ஜமுனா தம்பதிகளின் வீடு.
``அறிவிருக்காடி உனக்கு...? பட்டுப்
புடவைக்கே, 5000 ரூபாய் செலவு
பண்ணிருக்கியே..!'' மனைவியிடம் ராஜன்
கத்தினார்.
``இனிமே, பண்ணலைங்க. ப்ளீஸ்... மன்னிச்சிடுங்க..''
``ஆமாம்பா. நானும், இனிமே சாரி, சூரிதார்லாம் கேட்கமாட்டேன்..'' மகள்
நித்யாவும் சொன்னாள்.
நித்யா வெளியில் போனதும், புருஷனை ஜமுனா கேட்டாள்.
``ஏங்க... இது என்ன புதுக் கூத்து...? புடவையை வாங்கச் சொன்னதே, நீங்கதான்.
இப்ப, ஆ... ஊங்கறீங்க..''
``அடியே, நித்யா காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கறா, கஷ்டமில்லாம வளர்ந்தவ..!
பொதுவா, வசதியான வீட்டுப் பொண்ணுங்கதான், காதல், கத்தரிக்கான்னு
மாட்டிக்கும்ங்க!
அதான், கஷ்டத்துல திண்டாடறோம்கற மாதிரி பேசினேன். இனிமே, பொறுப்பா இருப்பா'' ராஜன் சிரித்தபடி சொன்னார்.
``நல்ல காரியம்தான் செஞ்சிருக்கீங்க...''
மாலை ஆறு மணி.
``அங்கிள்.. இந்த ஹேண்ட் பேகை, நித்யா தரச் சொன்னா..'' நித்யாவின் ப்ரெண்ட் தந்துவிட்டுப் போனாள்.
பேக்கினுள், ஒரு கடிதமிருந்தது. நித்யாவின் கையெழுத்துதான், ராஜன் படித்தார்.
``அன்பு அப்பாக்கு,
நான், ஒருவரைக் காதலிக்கிறேன். அவர், ஒரு பைசா செலவில்லாமல் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். நானும், சம்மதித்துவிட்டேன். உங்களுக்கும் எந்தச் செலவும் இல்லாமல் பார்த்துக் கொண்டுவிட்டேன். என்னை ஆசிர்வதியுங்கள்..!''
என்றிருந்தது..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment