தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த அன்னாசிப்பழம் - ஒன்று,
சர்க்கரை - ஒரு கப்,
பாதாம் பருப்பு - 50 கிராம்,
பால் - 1/2 லிட்டர்,
பேரீச்சம்பழம் - 100 கிராம்,
முந்திரிப் பருப்பு,
உலர் திராட்சை -தலா 25 கிராம்,
குங்குமப்பூ - சிறிதளவு,
ஏலக்காய் பொடி - லு டீஸ்பூன்.
செய்முறை :
அன்னாசிப்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.பேரீச்சம்பழத்தையும் கொட்டை நீக்கி நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, சாறை வடித்தெடுக்கவும். இதில் சர்க்கரையைக் கலந்து அடுப்பில்வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பழச்சாறு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும்.
பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மையாக அரைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அத்துடன், அரைத்த பாதாம் பருப்பு, பழச்சாறு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் கிளறி கீழே இறக்கிப் பரிமாறவும்.
Wednesday, July 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment