வீட்டிலே கடுமையான இட நெருக்கடி ஆயிடுச்சுப்பா'' என்றான், தீபக். ``என் குடும்பமும் தம்பி குடும்பமும், ரெண்டு பேரோட குழந்தைகளும்.....பெரிய வீடாப் பார்த்து மாறிடணும்ப்பா.''
``பார்க்கலாம்'' என்றார் அப்பா, அசிரத்தையாக.
மறுநாள் சித்தப்பா குடும்பத்துடன் வந்து இறங்கியதும் ஆடிப்போனான், தீபக். பள்ளி விடுமுறையானதால் ஒருவாரம் தங்கப் போகிறாராம். ஏற்கெனவே வீட்டில் நெருக்கடி....
மூன்றே நாட்களில் அவன் மாமாவும் திருச்சியிலிருந்து குடும்பத்துடன் வந்து நின்றார். ``திருப்பதி புறப்பட்டோம். வழியிலே இங்கே நாலைஞ்சு நாள் தங்கிட்டு ....'' என்றதும் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது தீபக்குக்கு. வீட்டில் கால் வைக்க இடமில்லை. சந்தைக்கடை மாதிரி நாள் முழுக்க இரைச்சல். விழி பிதுங்கியது.
ஒருவழியாக சித்தப்பாவும் மாமாவும் வெளியேறியதும் பெருமூச்சு விட்டான்.
``எப்படி இருக்கு இப்போ வீடு?'' என்றார், அப்பா.
``அப்பாடா, நிம்மதியா இருக்குப்பா. வீடும் விசாலமாயிடுச்சு'' என்றான், சித்தப்பாவும் மாமாவும் வந்துபோனதே அப்பாவின் ஏற்பாடுதான் என்பது
தெரியாமல்..
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment