நண்பன் வாசுவிற்கு டயல் செய்தான் சுதாகர்.
``என்னடா விஷயம்?''
``உனக்கு தேங்க்ஸ் பண்ணத்தான்..''
``எதுக்கு?''
``என் மனசை சந்தோஷப்படுத்திய உனக்கு தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்..''
``புரியும்படியா சொல்லுடா...''
``நேத்து உன் வீட்டுக்கு வந்திருந்தேன்..''
``என் வீட்டுக்கா.. நான் பார்க்கலையே..''
``வாசல் வரை வந்துட்டுத் திரும்பிட்டேன்..''
``ஏன்?''
``வாசல்லயே என் மனசு சந்தோஷமாயிடுச்சு.. இதுவரைக்கும் என் மனைவிதான் என்னைக் கேவலமா திட்டுவா... அடிப்பானு நினைச்சேன்.. ஆனா நேத்து உன் நிலையைப் பார்த்துட்டு என் மனைவி எவ்வளவோ பரவால்லைனு சந்தோஷமா இருந்தது.. அதான் திரும்பி வந்துட்டேன்..''.
Saturday, August 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment