Friday, August 1, 2008

மருத்துவக் குணம் நிறைந்த பாகற்காய்!

பாகற்காய் என்றவுடனே பலருக்கும் நாவில் கசப்பு சுவை தான் ஊற்றெடுக்கும். ஆனால், அதில் பல மருத்துவக் குணங்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய். நன்கு பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய்.

நீரிழிவு, ஜூரம், இருமல், இரைப்பு, மூலம் மற்றும் வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு பாகற்காயை அருமருந்து.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை மறைந்துவிடும்.

இதேபோல, ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விகிதத்தில் பாகற்காய் இலையின் சாறை குடிக்க, மிக விரைவில் நோய்கள் குணமாகும்

0 comments: