Wednesday, July 16, 2008

நாயகி

சாரி சுமி, இன்னிக்கு ஆபீசில லேட் ஆயிட்டுது. இன்னிக்கு சினிமாவுக்குப் போக முடியாது போல இருக்கு...'' என்றபடியே வந்தான் சேகர்.

``இது உங்களுக்கே நல்லாயிருக்கா? தவறாம ஒருநாள் விட்டு ஒருநாள் ரெடியா இருன்னு சொல்லவேண்டியது. அப்புறம் லேட்டாயிடுச்சு, வா, அப்படியே பக்கத்துல பீச் போயிட்டு வரலாம்னு சமாளிக்கிறது... அப்புறம் இந்த போலி அழைப்பெல்லாம் தேவையா?'' படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

ஒரு நிமிடம் பரிதாபமாக விழித்தான் அவன். ``சரி, உண்மையான காரணத்தைச் சொல்லிடறேன். சினிமாவுக்குப் புறப்பட்டு இருன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சுட்டு இருப்பே. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி இன்னும் அழகுபடுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''

``ஒரு நிமிஷம் இருங்க, இதோ புறப்பட்டு வர்றேன், பீச்சுக்கே போகலாம்!'' என்றாள் அவள்..

0 comments: