மைதா பூரி செய்ய பிசைந்தமாவு மீந்துவிட்டது. சாயங்காலம் அதில் செய்து பார்த்தேன். நன்றாக வந்தது.
தேவையானப் பொருட்கள்
மைதா =1கப்
தேங்காய்ப்பூ =1/2கப்
ம.பொடி =1/4ஸ்பூன்
உப்பு =1/4ஸ்பூன்
நெய் =50கி
எண்ணை =2தேக்கரண்டி
ஏலக்காய் =5
வெல்லம்[அ]சர்க்கரை =1/4கப்
செய்முறை
மைதாவில் உப்பு, ம.பொடி ஆகியவற்றுடன் எண்ணை சேர்த்து இலகுவாக பிசைந்து 1மணி ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் நெய் 1ஸ்பூன் விட்டு தேங்காய்ப்பூ போட்டு வதக்கி, பொடியாக்கிய ஏலக்காய் போட்டு கிளறி இறக்கி தூளாக்கிய வெல்லம்[அ] தூளாக்கிய சர்க்கரை போட்டு பிசறவும்.
எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கட்டையில் வட்டமாக தேய்த்து நடுவில் தேங்காய்ப்பூ வைத்து சுற்றிலும் மூடி மறுபடியும் தேய்க்கவும்.
தோசைக்கல்லில் தேய்த்ததை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment