Tuesday, July 15, 2008

திபெத் பழமொழி !

*இருதயம் மட்டும் உறுதியாக இருந்தால் - சுண்டெலியால் கூட யானையை தூக்க முடியும் .

*பணிவோடு பேசுபவனைப் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன் படுமுட்டாள் .

*உலகத்தில் யாருக்குமே - மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை - பிரம்மச்சாரியை தவிர .

*கன்றும், முட்டையும் வேண்டுமென்றால் - பசுவையும், கோழியையும் பயமுறுத்தக் கூடாது.

*இருட்டில் ஓடுகிறவன் தடுக்கி விழக்கூடும் .

*ஒரு முட்டையை திருடுபவன் எதையும் திருடுவான்.

*பணக்காரர்களின் கைகள் நீளமாயுள்ளன. ஆனால் அவை தேவலோகத்தை எட்டாது.

0 comments: