Saturday, July 5, 2008

மட்டன் குழம்பு



தேவையானப் பொருட்கள்

மட்டன் -- 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக கீறியது)
இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
பூண்டு -- 10 பல் (நசுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
சாம்பார் பொடி -- 2ஸ்பூன்

அரைக்க:

தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 3/4 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/4 டீஸ்பூன்
கசகசா -- 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -- 10 என்னம்

தாளிக்க:

பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 4 என்னம்
அன்னாசிப்பூ -- 1 என்னம்

செய்முறை

குக்கரில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு கறியுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.
பாதி வெந்த பின் சாம்பார் பொடி போட்டு 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவை களை தாளித்து தக்காளியை போட்டு நன்கு வதக்கி அதை கொதிக்கும் கல்வையில் கொட்டி குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வைக்கவும். குழம்பு ரெடி.


இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர்..
மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்

குறிப்பு:

இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர்.. மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்

0 comments: