தேவையானப் பொருட்கள்
வெங்காயம் - பாதி
கருவேப்பிலை/மல்லி இலை - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப் (தேவைப்பட்டால்)
உப்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
அரைக்க
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊறவைத்தது)
பட்டை - 1 இன்ச்
லவங்கம் - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசா கசா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
மிளகாய்தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
செய்முறை
பருப்பை 1/2 மணிநேரம் ஊறவக்கவும்.வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.மற்ற தேவையான பொருட்களை தயாரய் எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு/உளுந்து தாளித்து, வெங்காயம்,கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த விழுது,2 கப் தண்ணீர்,உப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் குக்கரை மூடி 1 அல்லது 2 விசில் விட்டு இறக்கவும்.
இப்பொது சுவையான இட்லி சாம்பார் ரெடி.மல்லி இலை தூவி சூடான இட்லி,தோசையுடன் பரிமாறவும்.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment