தேவையானப் பொருட்கள்
தோசை மாவு - 500 கிராம்
வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - 10 இலை பொடியாக நறுக்கியது
உப்பு - தே.அ
எண்ணை - தோசைக்கு சுற்றி ஊற்ற
புதினா சட்னிக்கு
புதினா இலை - 2 கைப்பிடி இலைகள்
தேங்காய் துருவல் - 3/4 கப்
புளி - 1/2 எலுமிச்சம் பழ அளவு
உப்பு - தே.அ
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் புதினா சட்னிக்கு கொடுத்துள்ளவற்றை எல்லாம் மிக்சியிலோ அம்மியிலோ வைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் தோசைக்கு தேவையான வெங்காயம்,கறிவேப்பிலை,சிறிது உப்பு சேர்த்து பிசிறி வைய்யுங்கள்.
பின் தோசையை ஊத்தப்பம் போலவும் அல்லாமல் மெல்லியதாகவும் அல்லாமல் ஓரளவு கட்டியாக ஊற்றுங்கள்..மேலே தூவும் வெங்காயம் பிடிக்குமளவு தடிமன்
பின் ஊற்றியதும் மேலே ஒரு 4 ஸ்பூன் அளவு வெங்காயத்தை பரவலாக தூவுங்கள் ..மேல் மாவு வெந்துவிடுவதற்குள் வெங்காயம் தூவாவிட்டால் வெங்காயம் ஒட்டாது.
பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணை 1 ஸ்பூன் சுற்றி ஊற்றி வேக விடுங்கள்...வெங்காயம் உள்ள புறம் நல்ல மொருகி வெங்காயம் ப்ரவுன் நிறத்துக்கு மாறி மணக்கும்..அப்பொழுது தான் சுவை .
இப்பொழுது சூடான தோசையையும் புதினா சட்னியையும் சேர்த்து சுவையுங்கள்..இந்த காம்பினேஷன் அருமையாக இருக்கும்.
குறிப்பு:
கொஞ்சமாக வெங்காயம் சேர்த்து நல்ல மொருக விட்டால் நல்ல சுவையாக இருக்கும்..கறிவேப்பிலையும் சேர்ப்பதால் தோசை சூப்பராக இருக்கும்.மற்றபடி புதினா சட்னி எல்லோரும் செய்யும் முறை தான்..தேங்காய் எண்ணை இல்லையென்றால் விட்டு விடலாம்.புதினா இல்லையென்றால் மல்லி இலை சேருங்கள் உடம்புக்கும் நல்லது
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment