தேவையானப் பொருட்கள்
உளுந்து =1ஆழாக்கு
கடலைப்பருப்பு =1/4ஆழாக்கு
ப.மிளகாய் =5
சின்னவெங்காயம் =10
உப்பு =தேவையானது
எண்ணை =300கி
து.பருப்பு =100கி
ம.பொடி =1/4ஸ்பூன்
வரமிளகாய் =7
தனியா =2ஸ்பூன்
வெந்தயம் =1/4ஸ்பூன்
சீரகம் =1/4ஸ்பூன்
புளி =எலுமிச்சையளவு
தக்காளி =2
கடுகு, உளுந்து =1ஸ்பூன்
பெருங்காயம் =1/4ஸ்பூன்
கருவேப்பிலை =1கொத்து
செய்முறை
உளுந்தையும், கடலைப்பருப்பையும் 2மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு ப.மிளகாய், உப்பு போட்டு வெண்ணைய் போல் அரைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்து கடாயில் எண்ணை சூடாக்கி வடையை தட்டி வேக வைத்து எண்ணை வடித்து எடுக்கவும்.
து.பருப்பை ம.பொடியுடன் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
புளியை கரைத்து கொதிக்கவிடவும்.
வரமிளகாய், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கி கொதிக்கும் புளியில் சேர்க்கவும். தக்காளி, 6சின்னவெங்காயம் உப்பு போட்டு கொதிக்கவிடவும். வெந்த பருப்பை போடவும்.
ஒரு கடாயில் 1ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை போட்டு சாம்பாரில்
கொட்டி கொதிக்கவிடவும்.
வடைகளை போட்டு ஊறப்போடவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment