Monday, July 7, 2008

பாசிப்பருப்பு தால்


தேவையானவை :

பச்சை மிளகாய் - 3 அல்லது 4
தக்காளி - 4
கரம் மசாலா பௌடர் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - 4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

இதற்கு முளைக்க வைத்த பயறு, தோலுடன் கூடிய உடைச்ச பயறு, பருப்பு இவற்றில் ஏதாவது ஒன்றில் செய்யலாம். பயறு பயன்படுத்தினால் முதல்நாள் ஊறவைத்து முளை கட்டவும். பயற்றம்பருப்பை நன்கு மலர கொஞ்சம் குழைவாய் வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் சீரகம் தாளித்துப் பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கரம்மசாலா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு குழைந்தவுடன் வெந்த பருப்பைக் கொட்டி உப்பு சேர்த்து நீர் சேர்த்து நன்கு தளர்த்த தளதள என்று 3, 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை வகைகளுக்கு ஏற்ற நல்ல சைட் டிஷ்.
இது ஆந்திராவில் மிகவும் பிரபலமான டிஷ். நல்ல சத்தானதும்கூட

0 comments: