டாடி, பாட்டிகிட்ட கதை கேட்கணும்போல இருக்கு, அம்மா கூட்டிக்கிட்டு போகமாட் டேங்கறாங்க!'' என்று அடம்பிடித்தான் இளமதியன்.
``இவ்வளவுதானா, நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுறேன்!'' என்று அவனைச் சமாதானப்படுத்தினார் அவனது தந்தை. மறுநாள் காலையில் தனது மகனை அழைத்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றார் அவர்.
பேரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.
``கதை இதோட முடியல. அடுத்தவாரம் வா, மீதிக்கதைய சொல்றேன்!'' என்றாள் பாட்டி. கதை கேட்ட மகிழ்ச்சியில் சரியென்று தலையாட்டிவிட்டு தனது தந்தையோடு வெளியேறினான் இளமதியன். ``ஒரு குட்டி கதைய அருமையா சொல்லி முடிச்சுட்டு, பேரன்கிட்ட `கதை முடியல, அடுத்த வாரம் வா'ன்னு பொய் சொன்னீங்களே ஏன்?'' அந்தப் பாட்டியுடன் தங்கியிருந்த விசாலாட்சி கேட்டாள். ``அப்படியாவது என் மகனும் பேரனும் என்ன பார்க்க வர்றதுக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமில்லையா?'' என்றபோது, விடைபெற முடியாமல் துளிர்த்திருந்த ஒரு துளி கண்ணீரும் பொசுக்கென்று வெளியேறியது..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தமிழ் ஓசையில் பதியப்பட்டிருக்கும் பாட்டி சிறுகதை நான் எழுதி குமுதத்தில் வெளிவந்தது. அதை வெளியிட்ட நீங்கள் எனது பெயரை பதிவு செய்யாதது ஏன்.
ஐரேனிபுரம் பால்ராசய்யா
bharathirasaiya@yahoo.com
Post a Comment