
மசாலா சுவை பிடிப்பவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு -- 2 என்னம் (வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்)
வெங்காயம் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2என்னம் (பொடியாக நறுக்கியது)
எண்ணைய் -- 6 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
பட்டை -- 1/2 அங்குலம்
கிராம்பு -- 3 என்னம்
இஞ்சி, பூண்டு விழுது -- 1 ஸ்பூன்
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 3 சிட்டிகை
உப்பு --ருசிக்கேற்ப
செய்முறை
வாணலியை காய வைத்து 3 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து பட்டை,கிராம்பு போட்டு சீரகம், சோம்பு சேர்த்து வெடித்தபின் இஞ்சி,பூண்டு கலவை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து தக்காளி வதங்கும் வரை வதக்கவும்.
இதனுடன் சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் உருளைக் கிழங்கு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். மீதியுள்ள எண்ணையை சேர்க்கவும்.
உருளைகிழங்கு சப்ஜி ரெடி.
0 comments:
Post a Comment