Monday, July 7, 2008

பயற்றம்ப்பருப்பு சப்பாத்தி அல்லது பூரி


தேவையானவை

பயற்றம்பருப்பு -1/2 கப்
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - அரை மூடி
கோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லித் தழை - 2 தேக்கரண்டி

செய்முறை

பயற்றம் பருப்பை நன்கு மலர வேகவைத்து நீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மிளகாய்ப் பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி வெந்த பயற்றம் பருப்புடன் உப்பு சேர்த்து இதனுடன் கொட்டி கெட்டியாகக் கிளறி கொத்துமல்லித் தழை சேர்த்து ஆறியவுடன் எலுமிச்சம் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கோதுமை மாவை நன்றாய் பிசைந்து மெல்லிய சப்பாத்தி அல்லது பூரி இட்டு இந்த பூரணத்தைப் பரப்பி ஒரு சப்பாத்தி அல்லது பூரியின் மேல் வைத்து இன்னொன்று அதன்மேல் வைத்து தண்ணீர் தொட்டு ஓரம் நன்றாக ஒட்டிகல்லில் போட்டு எண்ணெய் ஊத்தி இரண்டு புறமும் சிவக்க எடுக்கவும். அல்லது பூரி பொரிக்கவும்.

0 comments: