மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை நாடும் அதேவேளையில், உணவு முறையைக் கொண்டும் கவலை, பதற்றம் போன்றவற்றை களையலாம்.
இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில உணவுமுறை இதோ...
* கார்போஹைட்ரேட் கலவை அதிகமுள்ள உணவுப் பொருட்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். அரிசி, ஓட், பிரட் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
* அதிக அளவில் சர்க்கரை கலந்த பொருட்களை தவிர்த்தல் நல்லது.
* உணவு இடைவெளியில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு உட்கொள்வதற்கான நேர இடைவெளி அதிக அளவாக இல்லாமல், சீரானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, பகல் பொழுதில் உணவை தவிர்க்க கூடாது.
* பால், கீரைகள், பச்சை இலை கொண்ட காய்கறிகள், முட்டை, பயறு வகைகள், சோயாபீன்ஸ் போன்றவற்றில் உள்ள சத்துகள், மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வல்லது.
* புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இல்லையேல், இப்பழக்கங்களைக் குறைத்துக் கொள்வதாவது சாலச் சிறந்தது.
* தேநீர், காபி மற்றும் குளிர்பானங்களை அதிக அளவில் பருகக் கூடாது.
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment