Friday, August 1, 2008

சீப்புச்சீடை

இது மிகவும் சுவையானது.

தேவையானப் பொருட்கள்
பச்சரிசி =1படி
பொட்டுக்கடலை =1ஆழாக்கு
பெரிய தேங்காய் =1
உப்பு =தேவையானது
எண்ணை =700கி

செய்முறை
அரிசியை அரைத்து சலித்து வறுக்கவும். வறுத்த பிறகு மறுபடியும் சலிக்கவேண்டும்.
தேங்காயை ஆட்டி தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து பாலெடுக்கவும். அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும்.
பொட்டுக்கடலையை தூளாக்கி கொள்ளவும்.
அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, உப்பு ஆகியவற்றை தேங்காய்ப்பால் விட்டு பிசைந்து கொள்ளவும்.
சீப்ப்ச்சீடை கட்டையில் மாவை வைத்து ஒரு பேப்பரில் நீளமாக பிழிந்து கொள்ளவும். பிழிந்ததை ஒரு விரல் நீளத்திற்கு வெட்டி கையில் வைத்து மோதிரம்போல் இரண்டு ஓரங்களையும் ஒட்டவும். இதேபோல் எல்லவற்றையும் செய்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணை விட்டு சூடானதும் கொள்ளுமளவு போட்டு பொரிக்கவும்.பொரிக்கும்போது எண்ணையில் சலசலப்பு அடங்கியதும் எடுத்துவிடவும்.


குறிப்பு:
சீப்புசீடைக்கட்டை செட்டிநாட்டு ஏரியாவில்தான் கிடைக்கும்.இது கட்டையின் தகட்டில் 1இஞ்ச் நீளத்திற்கு பட்டையாக துவாரம் இருக்கும். இது ஒரு பக்கம் wwwwwwwww இதுபோலும் இன்னொருபக்கம் ப்லைன்னாகவும் இருக்கும். சீப்புசீடை செட்டிநாட்டு ஏரியாவைதவிர வேறு எங்கும் கிடைக்காது.

0 comments: